2004 ஆம் ஆண்டின் அந்த கோடைகாலம்... பஞ்சாப் மாநிலத்தின் தொழில் நகரமான ஜலந்தர் ஒரு இருண்ட, மரண பயத்தால் உறைந்து போயிருந்தது. ஏழைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அடுத்தடுத்து எவ்வித தடயமும் இன்றி மாயமாகத் தொடங்கினர். எந்தவொரு கடத்தல் கோரிக்கையோ, மிரட்டல் தொலைபேசி அழைப்புகளோ வரவில்லை; மாறாக, அகோரமான மரண அமைதி மட்டுமே எங்கும் நிலவியது. பகல் 10:00 மணி முதல் 12:30 மணி வரையிலான அந்த குறுகிய நேரத்தில், பெற்றோர்கள் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்திக்கொண்டிருக்க, ஆதரவற்ற அவர்களின் பிஞ்சு குழந்தைகள் வீதிகளில் வேட்டையாடப்பட்டனர்.சைக்கிளில் இனிப்புகளுடனும், விளையாட்டுப் பொருட்களுடனும் வலம் வரும் அந்த நடுத்தர வயது மர்ம மனிதன் யார்? அவன்தான் தர்பாரா சிங் - 23 பிஞ்சுகளைக் கடத்தி, அதில் 17 பேரை இரக்கமின்றி கழுத்தறுத்துக் கொன்ற ஒரு சைக்கோ கொலைகாரன். முப்பதாண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பின்னர் கருணை மனு மூலம் வெளியே வந்த அவன், தனது முந்தைய சிறைவாசத்திற்கு காரணமான புலம்பெயர்ந்த சமூகத்தை பழிதீர்க்கத் தேர்ந்தெடுத்த இரக்கமற்ற ஆயுதம்தான் அவர்களின் குழந்தைகள். பச்சிளம் குழந்தைகளைக் கொன்று வன்கொடுமை செய்தால் 'அவர்களது அலறல் சத்தம் கேட்காது' என அவன் சாதாரணமாக அளித்த வாக்குமூலம் காவல் துறையினரையே உறைய வைத்தது.இந்த கொடூரத் தொடர் கொலை வழக்கில் காவல்துறை ஒரு அசைக்க முடியாத ஆதாரத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தது: குற்றவாளியின் கைரேகை பதிந்த ஒரு மதுபான பாட்டில் மற்றும் ஒரு கண்ணாடி டம்ளர். ஆனால், ஆரம்பக் கட்ட விசாரணையில் எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மாயமாகியிருந்த இந்த முக்கிய ஆதாரங்கள், 5 முதல் 10 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் எவ்வாறு மர்மமான முறையில் தோன்றின? எந்தவொரு அடிப்படை DNA மரபணு பரிசோதனைகளும் இன்றி, மூன்று நாட்கள் தாமதமாக வந்த சோடிக்கப்பட்ட சாட்சிகளைக் கொண்டு பின்னப்பட்ட இந்த வழக்கு, தடயவியல் குளறுபடிகளால் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் சுக்குநூறாக உடைந்து, அந்த அரக்கன் மரண தண்டனையிலிருந்து தப்பியது எப்படி?ஒரு தொடர் கொலையாளி நிரந்தரமாக தப்பித்துவிட்டான், நீதி செத்துவிட்டது என்று ஒட்டுமொத்த நகரமும் பீதியில் ...
続きを読む
一部表示